< Back
மாநில செய்திகள்
சத்திரமனை செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சத்திரமனை செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
17 May 2023 6:30 PM GMT

சத்திரமனை செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

செல்லாண்டியம்மன் கோவில்

பெரம்பலூர் அருகே சத்திரமனை கிராமத்தில் மகா சக்தி மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோவில்கள் உள்ளன. மகா சக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் கடந்த 8-ந்தேதி வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து செல்லாண்டியம்மன் தேர் திருவிழா கடந்த 9-ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் இரவு நேரத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.

தேரோட்டம்

இதையொட்டி, காலை 11 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உற்சவ செல்லாண்டியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரோட்டம் தொடங்கியது. தேரினை பக்தர்கள் செண்டை மேளம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதிகளின் வழியாக வலம் வந்த தேர் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இன்று (வியாழக்கிழமை) மாலை அம்மன் மதில் ஏந்துதல் மற்றும் தெரு பொங்கல் வழிபாடு நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் குடிவிடுதலும், இரவு அம்மன் ஊஞ்சல் நிகழ்ச்சியுடன் செல்லாண்டியம்மன் தேர் திருவிழா நிறைவு பெறுகிறது.

மேலும் செய்திகள்