< Back
மாநில செய்திகள்
ஜெயவிளங்கியம்மன் கோவில் தேரோட்டம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

ஜெயவிளங்கியம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
7 March 2023 7:12 PM GMT

மாசி திருவிழாவையொட்டி ஜெயவிளங்கியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.

அரிமளம் ஜெயவிளங்கியம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 20-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து 24-ந் தேதி அம்மாக்களை அழைத்தல், 27-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாள் இரவும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு வந்தனர். திருவிழா நாட்களில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் ஜெயவிளங்கியம்மன் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன் தேரை அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரானது கோவில் வாசலில் இருந்து தொடங்கி சின்ன பொற்கொடையான் ஊரணி, குளவாய்பட்டி ரோடு, ஏம்பல் ரோடு வழியாக தேரடியை வந்தடைந்தது. தேர் வந்த வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் கூடியிருந்து அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்