< Back
மாநில செய்திகள்
ஒகளூரில் தேரோட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ஒகளூரில் தேரோட்டம்

தினத்தந்தி
|
1 Aug 2022 8:00 PM GMT

ஒகளூரில் தேரோட்டம் நடந்தது.

பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தனக்காப்பு மற்றும் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், பக்தர்களின் பால்குடம் ஊர்வலம், சுவாமி வீதி உலா நடந்தது. தேரோட்டத்தையொட்டி நேற்று மதியம் உற்சவ அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். இதையடுத்து திரளான பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதிகளின் வழியாக தேர் சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெறுகிறது.

மேலும் செய்திகள்