< Back
மாநில செய்திகள்
பிலிமிசையில் தேரோட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பிலிமிசையில் தேரோட்டம்

தினத்தந்தி
|
1 Aug 2022 7:51 PM GMT

பிலிமிசையில் தேரோட்டம் நடந்தது.

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பிலிமிசை கிராமத்தில் உள்ள பூரணகலா, புஷ்பகலா சமேத அய்யனார், பொன்னம்பலனார், முனியார், புது கருப்பனார், கல்லணை ஏமாபுரி ஆகிய சுவாமிகளின் தேர்த்திருவிழா கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விநாயகர் பூஜை, பூச்சொரிதல், சக்தி அழைத்தல், காப்பு கட்டுதல், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா, திருக்கல்யாணம், ஊரணி பொங்கல் படைப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று சாமி திருத்தேரில் எழுந்தருளுதல், பலியிடுதல் உள்ளிட்டவற்றுக்கு பின்னர் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு, வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர். இன்று(செவ்வாய்க்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


மேலும் செய்திகள்