< Back
மாநில செய்திகள்
திருப்பதி விஐபி தரிசனத்தில் மாற்றம்: சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை
மாநில செய்திகள்

திருப்பதி விஐபி தரிசனத்தில் மாற்றம்: சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை

தினத்தந்தி
|
2 Dec 2022 4:12 AM GMT

திருப்பதி விஐபி தரிசனத்தில் சோதனை அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் காலை 5 மணி முதல் 8 மணி வரை விஐபி பிரேக் தரிசனம் நடைமுறையில் இருந்தது. இதனால் முந்தைய நாள் இரவு ஏகாந்த சேவைக்கு பின் தரிசனத்திற்கு வரும் சாமானிய பக்தர்கள் மறுநாள் காலை 5 - 8 மணி வரை சுவாமியை தரிசிக்க இயலாமல் இருந்தது.

இந்நிலையில், விஐபி பிரேக் தரிசனம் நேற்று முதல் சோதனை அடிப்படையில் காலை 8 மணிக்கு தொடங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை 5 - 8 மணி வரை 15 ஆயிரம் சாமானிய பக்தர்கள் சர்வ தரிசனம் மூலம் சுவாமியை தரிசித்துள்ளனர். விடிந்ததும் சுவாமியை தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்ப புதிய நடைமுறை வசதியாக உள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர்

மேலும் செய்திகள்