< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
22 Jun 2024 2:06 PM GMT

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாமக்கல், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்