< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
23 May 2022 6:10 PM GMT

தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

தென்தாமரைகுளம்:

தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

4 பவுன் சங்கிலி பறிப்பு

தென்தாமரைகுளம் அருகே உள்ள பொற்றையடி பெருமாள்புரம் காலனியைச் சேர்ந்தவர் மந்திரம் (வயது 27), தூய்மை பணியாளர். இவருடைய மனைவி நந்தினி (23). சம்பவத்தன்று நந்தினி தன்னுடைய சகோதரரான காட்டுராஜாவுடன்(20) மோட்டார் சைக்கிளில் கீழ மணக்குடியிலிருந்து சாமிதோப்பு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அவர்கள் கீழமணக்குடி கோவில்விளை சந்திப்பு பகுதியில் சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அந்த மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென நந்தினியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்தான்.

கண்காணிப்பு கேமரா காட்சி

இதனால், அதிர்ச்சி அடைந்த நந்தினி திருடன்... திருடன் என்று சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால், அதற்குள் அந்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.

பின்னர், இதுகுறித்து நந்தினி தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்