விழுப்புரம்
தேர்வு செய்யப்பட்ட ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகளுக்கு சான்றிதழ்
|விக்கிரவாண்டியில் தேர்வு செய்யப்பட்ட ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்ட நீர்வள ஆதாரத்துறை சார்பில் ஏரிநீர் பாசன சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தல் அலுவலரும், சப்-கலெக்டருமான விமல்குமார் தலைமையில் இந்த தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இதற்கு புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.
இதில் மாவட்ட ஊராட்சிக்குமு தலைவர் ஜெயச்சந்திரன், சப்-கலெக்டர் விமல் குமார், தாசில்தார் இளவரசன், சமூக நல தனிதாசில்தார் கணேஷ், வடிப்பக அலுவலக துணை தாசில்தார்கள் ஜெயந்தி, வெங்கடபதி, உதவிபொறியாளர் கபிலன், வேளாண்மை கண்காணிப்பு குழு எத்திராசன், ஒன்றிய செயலாளர் ஜெயபாலமுருகன், ஒன்றிய தலைவர் முரளி, ஒன்றிய கவுன்சிலர்கள் அருணாசலம், செல்வம், சிற்றுராட்சிகள் சங்க செயலாளர் அரசகுமாரி அரிகிருஷ்ணன், நந்திவாடி பார்த்தசாரதி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.