< Back
மாநில செய்திகள்
பொரசப்பட்டு அரசு பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பொரசப்பட்டு அரசு பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ்

தினத்தந்தி
|
28 Feb 2023 6:45 PM GMT

மாநில கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற பொரசப்பட்டு அரசு பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ்

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொரசப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் வெற்றிபெற்று மாநில போட்டியிலும் கலந்துகொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் ஏழுமலை, சந்தியாகுராஜ், தனசீலி, பாத்திமாமேரி, கித்தேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஆகியோர் மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். மேலும் விளையாட்டு மட்டுமின்றி கல்வியிலும் எவ்வாறு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதில் ஆசிரியர்கள் சார்லஸ், ஜெயபிரகாஷ்நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலிடம் பெற்றது இப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்