< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்குப்பதிவு
கரூர்
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
25 Oct 2023 6:00 PM GMT

புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நொய்யல் அருகே குறுக்கு சாலை பங்களா நகர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் பங்களா நகர் பகுதியை சேர்ந்த குழந்தைசாமி (வயது 85) என்பவர் புகையிலை பொருட்களை விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்