< Back
மாநில செய்திகள்
ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஜூலை 6-ம் தேதி விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு
மாநில செய்திகள்

ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஜூலை 6-ம் தேதி விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு

தினத்தந்தி
|
4 July 2022 5:31 AM GMT

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 6-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

சென்னை,

சென்னை, அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்றது. அதில், 23 தீா்மானங்களைத் தவிர மற்ற தீா்மானங்களை நிறைவேற்றக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற அமா்வு உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் 23 தீா்மானங்கள் நிராகரிக்கப்பட்டதுடன், கட்சியின் தற்காலிக அவைத் தலைவரான தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத் தலைவராக நியமித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த பொதுக் குழு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த சூழலில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவும், நிர்வாகிகளை தண்டிக்க கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

இந்தநிலையில் அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை கோரி ஈபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 6-ம் தேதி விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. தலைமை நீதிபதி அனுமதியுடன் நாளை மறுநாள் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் வழங்கி உள்ளது.

அதிமுக வழக்கை கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிக்கலாம் என கேவியட் தரப்பினர் கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டது நினைவுகூறத்தக்கது.

மேலும் செய்திகள்