< Back
மாநில செய்திகள்

புதுக்கோட்டை
மாநில செய்திகள்
மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு; டிராக்டர் பறிமுதல்

20 Aug 2022 11:51 PM IST
மணல் கடத்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
அன்னவாசல் அருகே விளாப்பட்டி பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் அன்னவாசல் போலீசார் விளாப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் விளாப்பட்டியை சேர்ந்த சுந்தர் ஆனந்த், முத்துக்கருப்பன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.