< Back
மாநில செய்திகள்
ஓசூரில்இருதரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில்இருதரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
23 March 2023 7:00 PM GMT

ஓசூர்:

ஓசூர் சுகவனமூர்த்தி மடம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 53). டிரைவர். ஓசூர் வாணியர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). தின்பண்டங்கள் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஓசூர் ஏரித்தெருவை சேர்ந்த கமல்ராஜ் (24) என்பவர் ராஜேந்திரனின் கடைக்கு தின்பண்டங்கள் வாங்கி செல்ல ஸ்கூட்டரில் வந்தார்.

அப்போது ஸ்கூட்டரை ரமேசின் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இதுகுறித்து ரமேஷ் கேட்டார். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் ரமேஷ், அவரது மனைவி ராமரத்தினா ஆகிய 2 பேரும் தாக்கப்பட்டனர். இதுகுறித்து ரமேஷ் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கமல்ராஜ் (24), ராஜேந்திரன் (50), ஸ்ரீதர் (28), குமாரி (48) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் கமல்ராஜ் தான் தாக்கப்பட்டதாக ஒரு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ரமேஷ் (53), அவருடைய மனைவி ராமரத்தினா (42), மகன் அருண்குமார் (21), ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்