< Back
மாநில செய்திகள்
தர்மபுரி அருகேதற்கொலை செய்தவரின் உடல் போலீசுக்கு தெரியாமல் அடக்கம்உறவினர்கள் மீது வழக்கு
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி அருகேதற்கொலை செய்தவரின் உடல் போலீசுக்கு தெரியாமல் அடக்கம்உறவினர்கள் மீது வழக்கு

தினத்தந்தி
|
29 Sep 2023 7:00 PM GMT

தர்மபுரி அருகே உள்ள செட்டிகரை பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 36). இவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உறவினர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவருடைய உடலை அடக்கம் செய்து விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த செட்டிகரை கிராம நிர்வாக அலுவலர் தாமோதரன் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து பிரபுவின் உறவினர்கள் சத்யராஜ் (31), செல்வராஜி (43), சுப்பிரமணி (51), ஆறுமுகம் (54) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்