< Back
மாநில செய்திகள்
ரெயிலில் அடிபட்டு தச்சுத் தொழிலாளி பலி
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

ரெயிலில் அடிபட்டு தச்சுத் தொழிலாளி பலி

தினத்தந்தி
|
24 May 2022 9:38 AM GMT

வாணியம்பாடியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தச்சு தொழிலாளி ரெயிலில் அடிபட்டு பலியானார்.

ஜோலார்பேட்டை

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 52), தச்சு வேலை செய்து வந்தார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், நான்கு பிள்ளைகளும் உள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வாணியம்பாடி- கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்