< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வல்லத்தில் லாரி மீது சரக்கு வேன் மோதி விபத்து - டிரைவர் பலி
|22 Aug 2022 3:28 AM GMT
வல்லத்தில் சாலையின் முன்னால் சென்ற லாரி மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.
வல்லம்,
தஞ்சை மாவட்டம் வடபாதி எடகுடியை சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகன் பிரதீபன் (வயது 29) சரக்கு வேனில் கோழிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது முன்னால் ஜல்லி ஏற்றிக் கொண்டு சென்ற லாரி மீது கோழி ஏற்றி சென்ற சரக்கு வேன் பலமாக மோதியது. இதில் சரக்கு வேன் முன்பக்கம் நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி சரக்கு வேனை ஓட்டி சென்ற டிரைவர் பிரதீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரதீபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.