< Back
மாநில செய்திகள்
கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து - பள்ளி மாணவன் பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து - பள்ளி மாணவன் பலி

தினத்தந்தி
|
4 Jun 2022 10:50 AM GMT

திண்டுக்கல் அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு.


திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்தில் 6-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் பரத்குமார்(வயது 36). இவரது உறவினரின் துக்க நிகழ்விற்காக சென்னையிலிருந்து பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யன்கோட்டைக்கு வந்துள்ளார்.

அதன்பின்பு இவரது உறவினர் முனியப்பன் மகன் ராக்கேஷ்(11) மற்றும் அய்யன்கோட்டையைச் சேர்ந்த முருகவேல் என்பரின் மகன் ரக்சன்(9) ஆகியோரை தனது காரில் அழைத்துக்கொண்டு நேற்று அய்யம்பாளையம் மருதாநதி அணையை சுற்றி பார்த்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது மருதாநதி ரோட்டில் ஒத்தக்கடை என்ற இடத்தில் உள்ள திருப்பத்தில் திரும்பியபோது எதிர்பாரதவிதமாக சாலையின் ஓரத்தில் கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ராக்கேஷ், ரக்சன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராக்கேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த ரக்சன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் இறந்த ராக்கேஷ் பட்டிவீரன்பட்டியில் உள்ள தனியார். பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்ததுள்ளான். மேலும் இந்த விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்