< Back
மாநில செய்திகள்
கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
தென்காசி
மாநில செய்திகள்

கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
13 July 2023 6:45 PM GMT

கடையநல்லூரில் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடையநல்லூர்:

கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் காளியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சித்துராஜ் (வயது 36). கார் டிரைவர். குடும்ப பிரச்சினை காரணமாக மனம் உடைந்து காணப்பட்ட சித்துராஜ், கடந்த 8-ந்தேதி வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சித்துராஜ் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்