< Back
மாநில செய்திகள்
மொபட் மீது கார் மோதி பெண் பலி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மொபட் மீது கார் மோதி பெண் பலி

தினத்தந்தி
|
2 Oct 2022 10:03 PM GMT

மொபட் மீது கார் மோதி பெண் பலியானார்

நாங்குநேரி:

நெல்லை மாவட்டம் கீழஓமநல்லூரைச் சேர்ந்தவர் அருள்ராணி (வயது 43). இவரது கணவர் அருள்ராஜ் மற்றும் இவரது தம்பி மகன் அதிராஜ் (10) ஆகியோர் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு செல்ல மாலை போட்டிருந்தனர். 3 பேரும் சிறுவளஞ்சி கோவிலுக்கு செல்வதற்காக மொபட்டில் நாங்குநேரியை அடுத்த வாகைகுளம் அருகே நேற்று மாலை வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக இவர்கள் வந்த மொபட் மீது மோதியது. இதில் அருள்ராணி மேல் கார் டயர் ஏறியது. மற்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். உடனடியாக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் அருள்ராணி இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்