< Back
மாநில செய்திகள்
அரசு மருத்துவமனையில் தொழுநோய் குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனையில் தொழுநோய் குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி

தினத்தந்தி
|
20 March 2023 6:30 PM GMT

அரசு மருத்துவமனையில் தொழுநோய் குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தொடங்கி வைத்தார். இருக்கை மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன், திருச்சி மாவட்ட மருத்துவ பணிகள் (தொழுநோய்) துணை இயக்குனர் டாக்டர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட தொழுநோய் மருத்துவத்தின் துணை இயக்குனர் டாக்டர் சுதாகர் தொழுநோய் குறித்து பேசினார். இதில் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார மருத்துவமல்லா சுகாதார மேற்பார்வையாளர் அறிவுச்செல்வன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்