< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு: சவாரிக்காக அழைத்து வந்து கால்டாக்சி டிரைவர் படுகொலை..!
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு: சவாரிக்காக அழைத்து வந்து கால்டாக்சி டிரைவர் படுகொலை..!

தினத்தந்தி
|
26 Jun 2022 11:09 AM GMT

செங்கல்பட்டு அருகே கால்டாக்சி டிரைவரை படுகொலை செய்த மர்மநபரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பஸ் நிலையம் அருகே நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக அப்பகுதியினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் இறந்து போன நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இறந்து போனவர் சோழிங்கநல்லூர் அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த பூங்காவனம் என்பவரது மகன் அர்ஜூன் (வயது 30) என்பது தெரியவந்துள்ளது.

இவர் தனியார் கால் டாக்ஸி (ஓலா) நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும், சவாரிக்காக அழைத்து வந்து அர்ஜீனனை கொலை செய்து விட்டு காரை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து தப்பியோடிய மர்ம நபர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்