< Back
மாநில செய்திகள்
தவறி விழுந்த ஓட்டல் தொழிலாளி சாவு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தவறி விழுந்த ஓட்டல் தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
18 Aug 2023 6:30 PM GMT

தவறி விழுந்த ஓட்டல் தொழிலாளி உயிரிழந்தார்.

பெரம்பலூர்-துறையூர் ரோடு கல்யாண் நகரை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை (வயது 53). இவர் பெரம்பலூரில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 9-ந்தேதி மதியம் வீட்டில் படுத்திருந்த பிச்சை பிள்ளை எழுந்திருக்க முயன்றபோது கீழே தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டது. இதனால் அவரை மீட்ட அவருடைய குடும்பத்தினர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் கடந்த 12-ந்தேதி மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிச்சை பிள்ளை நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாா். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்