< Back
மாநில செய்திகள்
கேபிள் டி.வி. உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் மோசடி
திருச்சி
மாநில செய்திகள்

கேபிள் டி.வி. உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
22 May 2022 8:15 PM GMT

கேபிள் டி.வி. உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி:

துறையூர் அழகாபுரியை சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது 33). இவர் அந்த பகுதியில் கேபிள் டி.வி. நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் ஆன்-லைன் மூலம் வாசனை திரவியம் ஆர்டர் செய்துள்ளார். அப்போது, இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் நீங்கள் ஆர்டர் செய்துள்ள பொருளுக்கு ரூ.12 லட்சம் பரிசு விழுந்துள்ளது. பணம் வேண்டாம் என்றால் சொகுசு காரை பெற்றுக்கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அத்துடன் காரை பெற, சில கட்டணங்களை செலுத்தும்படி அவ்வப்போது கூறி ரூ.3 லட்சம் வரை அந்த வாலிபர் ஆன்-லைன் மூலம் பெற்றுள்ளார். ஆனால் அவர் கூறியபடி பரிசு எதுவும் கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகரன், திருச்சி மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சந்திரசேகரனிடம் பேசி, பணத்தை பெற்ற நபர் டெல்லியில் இருந்து பேசியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சைபர்கிரைம் போலீசார் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்