< Back
மாநில செய்திகள்
இடைத்தேர்தல் வெற்றி- திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவளித்துள்ளனர்... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
மாநில செய்திகள்

இடைத்தேர்தல் வெற்றி- திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவளித்துள்ளனர்... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

தினத்தந்தி
|
2 March 2023 8:20 AM GMT

திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவளித்துள்ளதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வாக்குகளை எண்னும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

தற்போதுவரை 5 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதல் 7 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 53,548 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 19,936 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 2,964 தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் 431வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இந்த நிலையில், இடைத்தேர்தல் வெற்றி குறித்து சென்னை அறிவாலயத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், இடைத்தேர்தலில் வெற்றியை தந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு திமுக சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவளித்துள்ளனர். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்.

இந்த ஆட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் தேடித்தந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு இந்த இடைத்தேர்தல் மிகப்ப்ரிய அச்சாரமாக இருப்பது பாராட்டத்தக்கது.

இந்த வெற்றிக்காக தொடர்ந்து பாடுபட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள் அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் இதைவிட மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்