< Back
மாநில செய்திகள்
சாலையோரம் தூங்கிய தொழிலாளி  தீயில் கருகி படுகாயம்
நாமக்கல்
மாநில செய்திகள்

சாலையோரம் தூங்கிய தொழிலாளி தீயில் கருகி படுகாயம்

தினத்தந்தி
|
16 Feb 2023 6:45 PM GMT

நாமக்கல்லில் சாலையோரம் தூங்கிய தொழிலாளி தீயில் கருகி படுகாயம் அடைந்தார். குடிபோதையில் பீடி புகைத்தபோது ஆடையில் தீ பிடித்ததா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலித்தொழிலாளி

நாமக்கல் மஜித்தெருவை சேர்ந்தவர் முபாரக் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு சொந்தமாக வீடு இல்லை. எனவே பள்ளிவாசல் மற்றும் அதனையொட்டி உள்ள பகுதியில் தங்கி வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பேட்டை பள்ளிவாசல் அருகே உள்ள குடிநீர் தொட்டி அருகே சாலையோரமாக முபாரக் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென அவரது ஆடையில் தீப்பற்றி கொண்டதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் அவரை காப்பாற்றி, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் விசாரணை

இதையடுத்து நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் முபாரக் குடிபழக்கம் உள்ளவர் என்பதும், மது குடித்து விட்டு பீடி புகைத்தபோது அதில் ஏற்பட்ட தீ முபாரக் ஆடையில் பற்றி இருக்கலாம் என்பதும் தெரியவந்து உள்ளது.

இது தொடர்பாக நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முன்விரோதம் காரணமாக யாராவது மர்ம நபர் தீயை பற்ற வைத்துவிட்டு சென்றார்களா? என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முபாரக் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்