< Back
மாநில செய்திகள்
பூட்டிய வீட்டில் திருட்டு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பூட்டிய வீட்டில் திருட்டு

தினத்தந்தி
|
9 Sep 2022 8:15 PM GMT

தேவர்குளத்தில் பூட்டிய வீட்டில் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் ேதடி வருகின்றனர்.

பனவடலிசத்திரம்:

நெல்லை மாவட்டம் தேவர்குளம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் செல்லத்தாய். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லத்தாய் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்லத்தாய் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதிலிருந்த 6 கிராம் கம்மல் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து தேவர்குளம் போலீசில் செல்லத்தாய் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருடர்களை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்