< Back
மாநில செய்திகள்
மாட்டுவண்டி பந்தயம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மாட்டுவண்டி பந்தயம்

தினத்தந்தி
|
7 July 2022 8:01 PM GMT

மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

அறந்தாங்கி அருகே கருவடைச்சேரி திருவமூல அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு 10-ம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பெரியமாடு 14, நடுமாடு 18, கரிச்சான்மாடு 24 கலந்து கொண்டன. பந்தயங்கள் 3 பிரிவுகளாக நடைபெற்றன. இதில் பெரியமாட்டிற்கு போகவர 8 மைல் தொலைவும், நடுமாட்டிற்கு 6 மைல் தொலைவும், கரிச்சான் மாட்டிற்கு 5 மைல் தொலைவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த பந்தயத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மாடுகள் பங்குபெற்றன. இதில் கலந்து கொண்ட மாடுகள் பந்தய இலக்கினை நோக்கி சீறிப்பாய்ந்தன. முடிவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசும், வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டன. சாலையின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

மேலும் செய்திகள்