< Back
மாநில செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு
கடலூர்
மாநில செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு

தினத்தந்தி
|
30 Sep 2023 6:45 PM GMT

சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம்

சிதம்பரம் வேங்கன் தெருவை சேர்ந்தவர் பிச்சைமணி(வயது 55). இவர் கடந்த 21-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூரில் சென்றிருந்தார். நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது டி.வி., மின்சார அடுப்பு, செட்டாப் பாக்ஸ் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்