< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
|31 July 2022 10:19 PM GMT
வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டுபோயின.
துவரங்குறிச்சி:
துவரங்குறிச்சியை அடுத்த சேத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜாமணி(வயது 45). இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு மகளுடன் கூலி வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோ திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பீரோவில் பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.500, வெள்ளிக்கொலுசு, செல்போன் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.