< Back
மாநில செய்திகள்
ஜெராக்ஸ் கடையின் பூட்டை உடைத்து ஹெட்செட்டுகள் திருட்டு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ஜெராக்ஸ் கடையின் பூட்டை உடைத்து 'ஹெட்செட்'டுகள் திருட்டு

தினத்தந்தி
|
21 May 2022 7:30 PM GMT

ஜெராக்ஸ் கடையின் பூட்டை உடைத்து ‘ஹெட்செட்’டுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், அயிலூர் இளங்கோ நகரை சேர்ந்தவர் கைலாசம். இவரது மகன் மாரியப்பன் (வயது 34). இவர் தனது குடும்பத்தினருடன் பெரம்பலூர் கே.கே.நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதுடன், புதிய பஸ் நிலையம் அருகே ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு எழுத சென்ற தேர்வாளர்கள் ஹால் டிக்கெட்டை பிரிண்ட் எடுப்பதற்காக மாரியப்பனின் ஜெராக்ஸ் கடைக்கு வந்தனர். அப்போது அவர்கள் கடையை பார்த்தபோது பூட்டு இல்லாமல் ஷட்டர் பாதியளவு திறந்தநிலையில் இருந்ததை கண்டு உடனடியாக செல்போன் மூலம் மாரியப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாரியப்பன் கடைக்கு வந்து பார்த்தபோது ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 'ஹெட்செட்' திருட்டு போயிருந்தது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்