< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

புதுக்கோட்டை தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம்

தினத்தந்தி
|
16 Sep 2022 7:40 PM GMT

புதுக்கோட்டை தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்.

புதுக்கோட்டை நகராட்சி திருக்கோகர்ணம் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்ட தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு உணவு பரிமாறி இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசினர். மேலும் மாணவர்களோடு அருகருகே அமர்ந்து உணவருந்தினர். மேலும் அருகில் அமர்ந்திருந்த மாணவர்களுக்கு உணவு ஊட்டினர். இத்திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 8 நகராட்சி தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 1,322 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தநிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன், நகராட்சி ஆணையர் நாகராஜன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்