< Back
மாநில செய்திகள்
பெரியப்பனையூர், நெய்தலூர் காலனியில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு
கரூர்
மாநில செய்திகள்

பெரியப்பனையூர், நெய்தலூர் காலனியில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு

தினத்தந்தி
|
23 Feb 2023 7:10 PM GMT

பெரியப்பனையூர், நெய்தலூர் காலனியில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவிரி ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து நீரேற்று நிலையத்தில் இருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு ஜீயபுரம்- நெய்தலூர் சாலை வழியாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் நெய்தலூரில் உள்ள துணை நீரேற்று நிலையத்தில் தண்ணீர் சேமித்து அதன் பின் மீண்டும் புதுக்கோட்டைக்கு செல்கிறது. இதையடுத்து நெய்தலூர் ஊராட்சி பெரியப்பனையூர் வளைவில் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது. இதேபோல் நெய்தலூர் காலனி மெட்டையன் தெருவிலும் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது.

இதனால் பெரியப்பனையூர்- நெய்தலூர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். மேலும் அருகே உள்ள ஊர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்