< Back
மாநில செய்திகள்
கொட்டாரம் அருகே கடப்பாரை கம்பியால் வாலிபர் அடித்துக் கொலை - போலீசார் விசாரணை
மாநில செய்திகள்

கொட்டாரம் அருகே கடப்பாரை கம்பியால் வாலிபர் அடித்துக் கொலை - போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
17 Aug 2022 3:35 AM GMT

கொட்டாரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கடப்பாறை கம்பியால் அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குமரி,

குமரி மாவட்டம் கொட்டாரம் அச்சன்குளம் ஓடைத்தெருவைச் சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன்(வயது52). இவரது மனைவி ராஜாத்தி(42). இவர்களுக்கு அரவிந்த்ராஜா(24), சுரேஷ்ராஜா( 22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் அரவிந்த்ராஜா பி.ஏ. பட்டப்படிப்பு முடித்து உள்ளார்.

அதேபோல இவரது இளைய மகன் சுரேஷ்ராஜாவும் பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு அடுத்த மாதம் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல இருந்தார்.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் அச்சன்குளம் மங்கம்மாள் சாலையில் வைத்து இளையமகன் சுரேஷ்ராஜா என்பவருக்கும் பக்கத்து வீட்டைசேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் சாம்சன்மனோ(18) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் மதுபோதையில் கால்வாயில் விழுந்து கிடந்த சுரேஷ்ராஜாவை, சாம்சன்மனோ கடப்பாறை கம்பியால் தலையில் சரமரியாக அடித்துள்ளார். இதில் சுரேஷ்ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட சுரேஷ்ராஜாவின் உடலை மீட்டு ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேஷ்ராஜாவை கடப்பாறை கம்பியால் தாக்கி கொலை செய்த சாம்சன்மனோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்