< Back
மாநில செய்திகள்
குளிர்பானம் என நினைத்து மண்எண்ணெய் குடித்த சிறுவன் சாவு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

குளிர்பானம் என நினைத்து மண்எண்ணெய் குடித்த சிறுவன் சாவு

தினத்தந்தி
|
30 July 2023 6:27 PM GMT

குளிர்பானம் என நினைத்து மண்எண்ணெய் குடித்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

திருமயம் அருகே உள்ள குளத்துப்பட்டடி சுந்தரம் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் மித்தின்ரோஜன் (வயது 4). நேற்று முன்தினம் வீட்டில் வைத்திருந்த மண்எண்ணெயை குளிர்பானம் என நினைத்து சிறுவன் மித்தின்ரோஜன் குடித்துள்ளான். இதில் மயங்கிய சிறுவனை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மித்தின்ரோஜன் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்