< Back
மாநில செய்திகள்
கரூரில் புத்தக திருவிழா தொடக்கம்
கரூர்
மாநில செய்திகள்

கரூரில் புத்தக திருவிழா தொடக்கம்

தினத்தந்தி
|
19 Aug 2022 7:12 PM GMT

கரூரில் புத்தக திருவிழா தொடங்கியது.

கரூர் திருமாநிலையூரில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. இந்த புத்தக திருவிழாவை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி திறந்துவைத்து பார்வையிட்டார். நேற்று தொடங்கிய இந்த புத்தக திருவிழா வருகிற 29-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 100 அரங்கில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை கலை நிகழ்ச்சிகளும், 6 மணி முதல் 8 மணி வரை நற்சிந்தனைகள் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்காக பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்