< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
கரூர் மாநகராட்சி சார்பில் ரத்ததான முகாம்
|27 Jun 2023 7:09 PM GMT
கரூர் மாநகராட்சி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
கரூர் மாநகராட்சி, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை மாநகராட்சி கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதியில் நேற்று நடத்தியது. இந்த முகாமை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தொடங்கி வைத்தார். இதில், இளைஞர்கள், பொதுமக்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்கப்பட்டன.