< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க.வின் என் மண், என் மக்கள் பிரசாரம் எடுபடவில்லை - அமைச்சர் சேகர் பாபு
மாநில செய்திகள்

'பா.ஜ.க.வின் என் மண், என் மக்கள் பிரசாரம் எடுபடவில்லை' - அமைச்சர் சேகர் பாபு

தினத்தந்தி
|
12 Sep 2023 10:44 AM GMT

சமத்துவம் பற்றி பேச அனைத்து அமைச்சர்களுக்கும் உரிமை உண்டு என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சென்னை,

என் மண், என் மக்கள் பிரசாரம் எடுபடாததால் ஏதாவது ஒரு பிரச்சினையை பா.ஜ.க.வினர் கையில் எடுப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். இது குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;-

"பா.ஜ.க.வின் என் மண், என் மக்கள் பிரசாரம் எடுபடவில்லை. அதற்காக ஏதேனும் ஒரு பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள். இந்த ஆட்சி சமத்துவத்திற்கான ஆட்சி. தி.மு.க.வின் கொள்கையே சமத்துவம் தான்.

சனாதனம் ஒரு பக்கம் என்றால், சமத்துவம் மறுபக்கம். சமத்துவத்தைப் பற்றி பேச அனைத்து அமைச்சர்களுக்கும் உரிமை உண்டு. உருட்டல், மிரட்டல்கள் மூலம் எங்கள் பணியின் வேகத்தை குறைக்க முடியாது." இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்