< Back
மாநில செய்திகள்
மின்வாரிய அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறை- சாத்தியக்கூறுகளை பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

மின்வாரிய அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறை- சாத்தியக்கூறுகளை பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
8 Dec 2023 5:41 PM GMT

தமிழக மின்வாரிய அலுவலகங்களில், பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்க மின்வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள 12 மின்வாரிய மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட அலுவலகங்களில் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை எனக்கூறி சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2019-ம் ஆண்டு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பயோ மெட்ரிக் பதிவேடு முறையை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், நிதிநிலையை கருத்தில் கொண்டு அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், களப்பணியில் இருப்பவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறையை நிறுவுவது எதிர்மறை விளைவை ஏற்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மின்வாரிய அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறைக்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

மேலும் செய்திகள்