< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
|13 Sep 2022 7:38 PM GMT
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி குளித்தலை அரசு பள்ளிகளில் நேற்று நடைபெற்றது. குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமை தாங்கி, பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். இதனைத் தொடர்ந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற அவர் அப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு குளித்தலை நகர்மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா முன்னிலை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர்கள், இருபள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆறுமுகம், மஞ்சுளா, பள்ளி ஆசிரியர்கள், தி.மு.க. கட்சி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.