< Back
மாநில செய்திகள்
இளையராஜா மகள் பவதாரிணி உடல் தி.நகர் கொண்டுவரப்பட்டது - பொதுமக்கள், திரைத்துறையினர் அஞ்சலி
மாநில செய்திகள்

இளையராஜா மகள் பவதாரிணி உடல் தி.நகர் கொண்டுவரப்பட்டது - பொதுமக்கள், திரைத்துறையினர் அஞ்சலி

தினத்தந்தி
|
26 Jan 2024 11:18 AM GMT

இளையராஜா மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

சென்னை,

சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

சென்னை விமான நிலையம் வந்தடைந்த பவதாரிணி உடல் தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் அஞ்சலிக்காக பவதாரிணி உடல் வைக்கப்பட்டுள்ளது.

பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு இயக்குனர்கள் வெங்கட் பிரபு, சுதா கொங்கரா, நடிகர் பிரேம்ஜி, பாரதிராஜா மகன் மனோஜ் ஆகியோர் வருகை தந்துள்ளனர். மேலும், பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் குவிந்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, இறுதிச்சடங்கிற்காக அவரது உடல் இரவு 10 மணியளவில் சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்