< Back
மாநில செய்திகள்
தூய்மை பணிகளுக்கு பேட்டரி வாகனங்கள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

தூய்மை பணிகளுக்கு பேட்டரி வாகனங்கள்

தினத்தந்தி
|
25 Aug 2023 12:15 PM GMT

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் தூய்மை பணிகளுக்கு பேட்டரி வாகனங்களை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் தூய்மை பணிகளுக்கு 27 ஊராட்சிகளுக்கு 34 பேட்டரி வாகனங்களை ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.

ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்டகவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றிய ஆணையாளர் பரிமேலழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு குப்பை சேகரிக்கும் பணிகளுக்காக பேட்டரி வாகனங்களை 27 ஊராட்சிகளுக்கு 34 வாகனங்களை அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கினார்.

மேலும் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காட்டுமலையனூர், கரிக்கலாம்பாடி, செவரப்பூண்டி, கனபாபுரம், வழுதலங்குணம் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 13 பேருக்கு தலா ரூ.4 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டும் பணிக்கான உத்தரவுகளை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜபார், குப்புசாமி, ரங்கநாயகிஅருணாச்சலம், குப்புஜெயக்குமார், விஜயா சேகர், பரசுராமன், துணைத்தலைவர்கள் அவுல்தார், உமாதங்கராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் சிவகாமிதேவேந்திரன், பாக்கியலட்சுமி லோகநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) அப்துல்கபார் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்