< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு அருகே பேட்டரி திருடியவர் கைது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு அருகே பேட்டரி திருடியவர் கைது

தினத்தந்தி
|
24 July 2022 8:30 AM GMT

செங்கல்பட்டு அருகே லாரி பேட்டரிகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் ரெட்டிபாளையம் பகுதியில் லாரிகளில் உள்ள பேட்டரிகள் திருடப்பட்டு வந்தன. இது குறித்து லாரி உரிமையாளர்கள் பாலூர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிகளில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும் 2 பேர் ஒரு மினி வேனில் தப்பிச்செல்வதை பார்த்த போலீசார் அவர்களை விரட்டி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஒருவர் மட்டும் தப்பிய நிலையில் மற்றொருவர் மினி வேனுடன் சிக்கினார். அவரை பாலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில் பிடிபட்டவர் சென்னை, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த விஜயகுமார் (வயது 48) என்பது தெரியவந்தது. பிடிபட்ட விஜயகுமாரிடம் இருந்து 6 லாரி பேட்டரிகள், ஒரு மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். தப்பிச்சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்