< Back
தமிழக செய்திகள்
வங்கி ஊழியர் மர்ம சாவு
பெரம்பலூர்
தமிழக செய்திகள்

வங்கி ஊழியர் மர்ம சாவு

தினத்தந்தி
|
23 Aug 2023 12:13 AM IST

வங்கி ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

குன்னம்:

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காந்தி நகர், வல்லாய் தெருவை சேர்ந்தவர் விஜயராமன் (வயது 44). இவருக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். விஜயராமன் பெரம்பலூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஆயுள் காப்பீடு பிரிவில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இதற்காக அவர் அய்யலூர் ஜீவா நகரில் வாடகை வீட்டில் 3-வது மாடியில் தனியாக தங்கியிருந்து, பணிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் அந்த வீட்டில் விஜயராமன் மூக்கில் ரத்தம் வந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்