< Back
மாநில செய்திகள்
வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு
கரூர்
மாநில செய்திகள்

வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு

தினத்தந்தி
|
8 March 2023 6:40 PM GMT

வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் பூவன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்துள்ளனர். பின்னர் விளைந்தவுடன் பறித்து, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.350-க்கு விற்றது தற்போது ரூ.400-க்கும், ரஸ்தாளி ரூ.250-க்கு விற்றது ரூ. 300-க்கும், பச்சைநாடன் ரூ.200-க்கு விற்றது ரூ.250-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.400-க்கு விற்றது ரூ.500-க்கும் ஏலம் போனது. வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்