< Back
மாநில செய்திகள்
அய்யனாரப்பன்-கருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம்
சேலம்
மாநில செய்திகள்

அய்யனாரப்பன்-கருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
3 March 2023 7:30 PM GMT

மேச்சேரி:-

மேச்சேரி அருகே பள்ளிப்பட்டி சீப்பிளியூர் கருமங்காட்டில் அய்யனாரப்பன் சாமி, கருப்பு சாமி கோவில் திருப்பணிகள் நடந்து முடிந்தன. கடந்த 26-ந் தேதி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு 6-ம் கால யாக பூஜை நடந்தது. பின்னர் காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் விமானங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் கூடிய மூலவர் பூர்ணா புஷ்கலாம்பிகா சமேத அய்யனாரப்பன்சாமி கருப்புசாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவின் போது ஹெலிகாப்டர் மூலம் மலர் மற்றும் புனிததீர்த்தம் தெளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டுரசித்தபடி கோபுர தரிசனம் செய்தனர். பின்னர் மதியம் ஒரு மணிக்கு மகா அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினரும் மற்றும் மணங்காரன் வகையறா பங்காளிகளும் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்