< Back
மாநில செய்திகள்
அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா

தினத்தந்தி
|
28 Aug 2023 6:20 PM GMT

அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

அறந்தாங்கி அருகே பஞ்சாயத்தி கிராமத்தில் பூரண புஷ்கலாம்பிகை சமேத மென்னமுடையார் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதையடுத்து செக்போஸ்ட் அருகே உள்ள குயவர் தெருவில் மண்ணால் செய்யப்பட்ட குதிரை, மதலை உள்ளிட்ட 93 சிலைகளை பக்தர்கள் தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவிலில் சிலைகளை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்