< Back
மாநில செய்திகள்
அய்யா வைகுண்டர் மலர்பதியில்திருக்கல்யாண ஏடு வாசிப்பு நிகழ்ச்சி
தேனி
மாநில செய்திகள்

அய்யா வைகுண்டர் மலர்பதியில்திருக்கல்யாண ஏடு வாசிப்பு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
6 Jan 2023 6:45 PM GMT

தேனி அருகே அய்யா வைகுண்டர் மலர்பதியில் திருக்கல்யாண ஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது.

தேனி அருகே ரத்தினம் நகரில் உள்ள அய்யா வைகுண்டர் மலர்பதியில் அகிலத்திரட்டு அம்மானை ஏடு வாசிப்பு நிகழச்சி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடந்தது. காலையில் உகப்படிப்பு, பகலில் உச்சிப்படிப்பு, மாலையில் உகப்படிப்பு நடந்தது. மேலும் திருக்கல்யாண ஏடு வாசிப்பையொட்டி அய்யா வைகுண்டருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) பட்டாபிஷேக விழா நடக்கிறது.

மேலும் செய்திகள்