< Back
மாநில செய்திகள்
ஆயுத பூஜை விடுமுறை: மின்சார ரெயில்கள் ஞாயிறு கால அட்டவணைப்படி இயங்கும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மாநில செய்திகள்

ஆயுத பூஜை விடுமுறை: மின்சார ரெயில்கள் ஞாயிறு கால அட்டவணைப்படி இயங்கும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
1 Oct 2022 4:57 PM GMT

ஆயுத பூஜையை முன்னிட்டு மின்சார ரெயில்கள் ஞாயிறு கால அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

ஆயுத பூஜையை முன்னிட்டு வருகிற 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) விடுமுறை நாளாக இருப்பதால், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி, சென்டிரல்-அரக்கோணம், சென்டிரல்-சூலூர்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுகிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்