< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
|6 Oct 2022 6:45 PM GMT
ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் வட்டார தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர், கோட்டையூர் ஊராட்சியில் வாசுதேவநல்லூர் வட்டார மகளிர் திட்டம் சார்பில் விடுபட்ட இலக்கு மக்கள், பெண்களை சுயஉதவிக்குழுவில் சேர்த்திட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் ஏராளமான சுயஉதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர். வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் குக்கிராமங்கள் தோறும் மகளிர் சுயஉதவி குழுவில் சேராத மற்றும் விடுபட்ட மகளிர்களை குழுவில் சேர்ப்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், அவர்களது வாழ்வாதார முன்னேற்றத்திற்கு மகளிர் குழு மூலம் கடன் வழங்கியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் குறித்தும் எடுத்து கூறப்பட்டது.