< Back
மாநில செய்திகள்
பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
15 Jun 2022 6:22 PM GMT

பொம்மனப்பாடி கிராமத்தில் பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மேற்பார்வையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து மற்றும் போலீஸ் குழுவினர் பொம்மனப்பாடி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து எடுத்து கூறினர். மேலும், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குழந்தை தொழிலாளர் முறை குறித்தும், உங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளர் முறை இருந்தால் அதனை ஒழிக்க ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் ஒன் ஸ்டாப் மையத்தின் தன்னார்வலர் கீதா, பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்